எழுச்சி பெறும் கட்டுமானத் துறை - ஒரு கோடி வீடுகள் தயார் ! எழுச்சி பெறும் கட்டுமானத் துறை - ஒரு கோடி வீடுகள் தயார் ! - ETbuild

எழுச்சி பெறும் கட்டுமானத் துறை - ஒரு கோடி வீடுகள் தயார் !

கட்டுமானத் துறையில் நிலவி வரும் மந்த நிலை, கொஞ்சம் கொஞ் சமாக மாறி வருவதாக ரியல் எஸ்டேட் துறையினர் கூறத் தொடங்கியி ருக்கின் றனர்.
இதனால், விரைவில் கட்டுமானத் துறை எழுச்சி பெறும் என்றும், வீடுகள் மற்றும் நிலத்தின் மதிப்பு உயரும் என்றும் விளம்பர ப்படுத்து கின்றனர். 

எனவே, விலை அதிகரிப்ப தற்கு முன்பாக வீடுகளை வாங்குங்கள் என்றும்,

ஏற்கனவே கட்டி முடிக்கப் பட்ட வீடுகளைத் தள்ளுபடி விலையில் தருவதா கவும் சில கட்டுமான நிறுவன ங்கள் அறிவிக் கின்றன. 

இதை நம்பி, தங்களின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக் கொள் ளலாமா? என்ற கேள்வி குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர் பலருக்கும் எழுந் துள்ளது.

ஆனால், கட்டுமானத் துறை முன்னெப் போதும் இல்லாத அளவுக் குத் தேக்க நிலையை சந்தித்து ள்ளதாக அண்மையில் எடுக்கப் பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. 

இந்தியா முழுவதும் கட்டி முடிக்கப் பட்டு, குடியேறுவ தற்குத் தயாரான நிலை யில் இருக்கும் வீடுகளின் எண்ணி க்கை மட்டும் ஒரு கோடியே 20 லட்சம். 

மத்திய அரசின் பொருளா தார ஆய்வறி க்கையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப,

தேவைப் படும் புதிய வீடுகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 88 லட்சம் வீடுகள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. 
எனவே, தேவைக்கும் குறைவாக த்தானே கட்டி முடிக்கப் பட்ட வீடுகளின் எண்ணி க்கை இருக்கிறது என்றும் தோன்றக் கூடும். ஆனால், உண்மை நிலை நேர் எதிரானது. 

புதிய வீடு தேவைப் படும் ஒரு கோடியே 88 லட்சம் குடும்பங் களில், சுமார் 95 சதவிகிதம் பேர் குறைந்த வருவாய் அல்லது பொருளாதார நிலையில் பின் தங்கியிரு ப்பவர்கள். 

இவர்களு க்குத் தேவை யானது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்தர அடுக்கு மாடிக் குடியிரு ப்புகள் அல்ல.

மாறாக, அவர்களின் அத்தியா வசியத் தேவைக்கு ஏற்ற அடிப்படை வசதிகளைக் கொண்ட குறைந்த விலை வீடுகள்தான். 

நாடு முழுவதும் கட்டி முடிக்கப் பட்டுத் தயாராக இருக்கும் வீடுகள், விலை போகாத தற்கு இதுவும் முக்கியக் காரணமாகி யிருக்கிறது. 

பூட்டிக் கிடக்கும் புதிய வீடுகள் 
 
ஒரு கோடிக்கும் அதிகமான வீடுகள் விற்பனை செய்யப் படாமல் இருந்தாலும், நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டுமான நிறுவ னங்கள் தொடர்ந்து வீட்டைக் கட்டி வருவது ஏன்?

என்ற கேள்விக்குக் கடந்த பிப்ரவரியில் FICCI அமைப்பு வெளியிட்ட ஆய்வுத் தகவலில் குறிப் பிடத்தக்க பதில் கிடைத்தது. 

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு 11 சதவி கிதமாக அதிகரித் திருப்பதா கவும், அதிக விலையுள்ள வீடுகள் விற்பனை செய்யப் படுவதால்,

2012-13-ம் ஆண்டில் மட்டும் கறுப்புப் பணம் அதிக அளவில் இத்துறை யில் முதலீடு செய்யப் பட்டதாக வும் அந்த ஆய்வுத் தகவலில் தெரிவி க்கப்பட் டுள்ளது. 
அதிகரித்து வரும் கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக் கட்டு மானத் துறையைச் சேர்ந்த சில பண முதலைகள் அதிகம் பயன் படுத்திக் கொண்டு ள்ளனர். 

இதன் காரண மாகவே, கட்டி முடிக்கப் பட்ட பல லட்சம் வீடுகள் தயார் நிலையில் இருந் தாலும்,

தொடர்ந்து வீடுகளைக் கட்டும் பணியைச் சில கட்டுமான நிறுவன ங்கள் செய்து வருகின்றன. 

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டால்,

2011-ம் ஆண்டுக் கணக் கீட்டின்படி, இந்தியா வில் குடும்பங் களின் எண்ணி க்கை 24 கோடியே 70 லட்சமாக இருக்கிறது.

கடந்த 2001-ம் ஆண்டில் இது 18 கோடியே 70 லட்சமாக இருந் துள்ளது.

அதாவது 2001 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மட்டும், புதிதாக 6 கோடிக் குடு ம்பங்கள் உரு வாகியிருக் கின்றன.

இதே கால கட்டத்தில் இந்தியாவில் கட்டப் பட்ட வீடுகளின் எண்ணிக்கை 8 கோடியைக் கடந்து விட்டது.

அதாவது, வீடுகள் தேவைப் படும் குடும் பங்களின் எண்ணி க்கையை விட, புதிய வீடுகளின் எண்ணிக்கை அதிகரி த்துள்ளது.

நகரங் களைப் பொறுத்த வரை குடும்ப ங்களின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சமாக அதிகரித்த நிலையில், புதிய வீடுகளின் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சமாக இருக்கிறது. 

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கட்டி முடிக்கப் பட்டுக் காலியாகப் பல வீடுகள் இருப்பதன் மூலம் இந்தப் புள்ளி விவரத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

கட்டுமானத் துறையில் கறுப்புப் பணம் முடக்கப் படுவதை அரசு கட்டுப் படுத்த நடவடி க்கை எடுக்க வில்லை என்றால்,

எதிர் காலத்திலும், கட்டி முடிக்கப் பட்ட புதிய வீடுகள் பூட்டிக் கிடப்பதைத் தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். 

சரி, உண்மை ஒருபக்கம் இருக்கட்டும், சொந் தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நடுத்தரக் குடும் பங்கள் என்ன செய்வது? என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. 
கறுப்புப் பணம் முடங்கும் அதே கட்டுமானத் துறையில், குறைந்த வருவாய் உள்ள மற்றும்

பொருளா தார ரீதியாகப் பின்தங் கியுள்ள குடும்பங் களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் எண்ண த்துடன் பல கட்டுமான நிறுவ னங்கள் இருக்கத் தான் செய்கின்றன. 

அவர்களைப் பொறுத்த வரை, குறைந்த அளவு லாபத்தில் அதிக வீடுகளை விற்றுத் தங்களின் நிறுவ னத்தை வளர்ப்பதே இலக்கு.

கறுப்புப் பணத்தை முதலீடு செய்த தனி நபர்கள் போல் இவர்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்படு வதில்லை.

எனவே, ஒரு கட்டுமான நிறுவனத் திடம் இருந்து வீட்டை வாங்கும் முன்பாக, அதன் உண்மை யான விலை எவ்வளவு என்பதை ஒரு முறைக்குப் பல முறை சரிபார்த்து வாங் குவதே சிறந்தது.
Previous Post Next Post
COMMENTS... plz use me