கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள ! கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள ! - ETbuild

கட்டிட கட்டுமானத்தின் போது பணிகளை முறையாகப் மேற்கொள்ள !

நாம் சொந்தமாகப் பார்த்துப் பார்த்துக் கட்டும் வீட்டைக் கனவு இல்லம் என அழைக்கிறோம். எதற்காக? நம் வாழ்நாளின் மிகப் பெரிய கனவின் வடிவம் அது. 
அம்மாதிரி யான கனவு இல்லத்தின் அறைகளை வடிவமைப்பது குறித்து தினந்தோறும் பல யோசனைகள் நமக்கு வரும்.

வெளிப்புற வடிவமைப்பு, உள் அலங்காரம் என நணர்களிடமும் இணையத்தி லும் தேடிப் பிடிப்போம். 

ஆனால் கட்டு மானத்தில் இந்த அளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ?

இந்தக் கேள்விக்கு நம்மால் உடனடியாகப் பதில் கூற முடியாது. ஏனென்றால் பெரும்பாலும் நாம் அதில் கவனம் செலுத்துவது இல்லை.

கட்டுமானம் என்பது தொழில் நுட்பம் சார்ந்தது என்பதுதான் இந்த அஜாக்கிரதைக் கான காரணம்.

அதை எல்லாம் வீட்டைக் கட்டும் தொழிலாளிகளும் மேற்பார்வை யாளர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணமும் இயல்பாகவே நம்மிடம் உள்ளது.

ஆனால், அது அப்படியல்ல. வீடு கட்டும் தொழிலாளர்கள் தங்கள் வேலையை முறையாகச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

என்றாலும் அவர்களுக்கு அது தொழில். அவர்கள் தொடர்ந்து பல வீடுகளைக் கட்டி வருபவர்கள். ஆனால் நமது நிலைமை அப்படியல்ல. 

நாம் கட்டுவது ஒரு வீடு. அது நமது பெரும் கனவுகளில் ஒன்று.  ஆகவே அதில் தேவைப்படும் கவனத்தை நாம் பதிப்பது அவசியமானது. 

கட்டுமானப் பணிகளின் போது முறையான கவனமின்றி மேற்கொள்ளப்படும் செயல்களால் வீட்டின் பலம் பாதிக்கப்படும்.

உறுதியான கம்பியையும் சிமெண்டையும் கொண்டு வீட்டைக் கட்டினாலும் வீடு கட்டும் முறையை

ஒழுங்காக மேற்கொண்டால் மட்டுமே வீடோ, கட்டிடமோ அதற்குரிய உறுதித் தன்மையுடன் எழும்பும். 

இல்லை யெனில் எதிர் பார்ப்புடன் நாம் கட்டிய வீடு, நாம் எதிர்பாராத விதத்தில் நம்மை வாட்டமடையச் செய்து விடும்.
ஆகவே, கட்டிட நிபுணர்களின் ஆலோசனை யுடன் நமது வீடு கட்டும் பணியை நாமே அவ்வப்போது மேற்பார்வை செய்வது நல்லது.

பொதுவாக, கான்கிரீட் கட்டுமானத்தின் போது முறையாகப் பணிகளை மேற்கொள்ளா விட்டால்

நான்கு வகையான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

முதலில் மெல்லிய விரிசல் விழ வாய்ப்புண்டு. மெல்லிய விரிசலால் பெரிய பாதிப்புகள் இல்லை,

என்றாலும் கான்கிரீட் கட்டுமானத்தில் போதுமான நீர் ஊற்றி அதை முறையாகப் பதப்படுத்தும் போது இத்தகைய விரிசல்கள் விழாமல் தடுக்கலாம்.

மழைக் காலங்களில் அதிகமாக ஏற்படும் மெல்லிய விரிசல் அடுத்த பிரச்சினை.

ஏனெனில் சுவர்களை சாந்துப் பூச்சு கொண்டு பூசும்போது சிமெண்டுடன் மணலைச் சேர்த்துப் பயன்படுத்தி யிருப்பார்கள்.

இந்த மணலின் அழுத்தம் மழைக் காலத்தில் அதிகரிக்கும்,  ஆகவே அப்போது விரிசல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

ஆனால் குளிர் காலத்தில் சுவர்கள் விரி வடையாமல் சுருங்கவே செய்யும் எனவே விரிசல்களின் அளவு குறையக் கூடும்.

சுவர்களின் விரிசல்கள் விழுவதற்குக் காரணம் முறையாக அஸ்திவாரம் அமைக்காததே என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள்.

இத்தகைய விரிசல்களால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே இதை வரும்முன் தடுப்பதே சாலச்சிறந்தது. 

இதைத் தடுக்க அஸ்திவாரம் முறையாக அமைக்கப் படுகிறதா என்பதை நிபுணர்களின் உதவியுடன் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

வீட்டின் கூரைப் பகுதியை முறையாக அமைக்கா விட்டால் உயரத்தில் உள்ள கூரைப் பகுதியில் விரிசல் ஏற்பட்டு விடும்.

சில வேளைகளில் சுவரும் கூரையும் சந்திக்கு மிடத்தில் விரிசல்கள் தோன்றும்  அல்லது கூரையின் நடுப்பகுதியில் விரிசல்கள் தோன்றும். 
கான்கிரீட் சிலாப்களில் ஏற்படும் இழுவிசை காரணமாக கூரையின் நடுப்பகுதியில் விரிசல்கள் விழுந்து விடும்.

முறையாக பூசா விட்டால் சுவரும் கூரையும் சந்திக்கு மிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு விடும்.

இவை அனைத்தையும் கட்டுமானத்தின் போதே கவனத்தில் கொண்டு இவற்றைத் தவிர்க்க கட்டுமானத் தொழிலாளி களிடம் எச்சரிக்க வேண்டும்.
கட்டிடங்களின் மீது பாசி படர்ந்தாற் போல் நீர் கசிந்திருப்பதும் கட்டிடத்திற்குத் தீங்கையே விளைவிக்கும். 

சுவர்களின் உள்ளே பதிக்கப் பட்டிருக்கும் நீர்க் குழாயில் பழுது இருக்கும் போது அதிலுள்ள நீர் கசிந்து சுவர்களை ஊடுருவும்.

இந்த நீர் சுவர்களை அரித்தெடுத்துக் கட்டிடத்தின் ஸ்திரத் தன்மையைப் போக்கி விடும்.

ஆகவே ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தும் விதமாகக் கட்டிடத்தைக் கட்ட வேண்டும்.

தரைத் தளத்தில் 2 அங்குல சல்லிக் கற்களைப் பாவுதல், முக்கால் அங்குல குழாய்களைப் பதித்தல் போன்ற வற்றைச் செய்து 

ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்த இயலும். சுவர்களின் வழியே செல்லும் குழாய்களில் நீர்க்கசிவு இருந்தால்

அதைத் தாமதமின்றி பழுது பார்த்து விடுதலும் அவசியம். 
Previous Post Next Post
COMMENTS... plz use me