சொந்த வீடு கட்டுவோர்க்கு முக்கிய யோசனைகள் ! சொந்த வீடு கட்டுவோர்க்கு முக்கிய யோசனைகள் ! - ETbuild

சொந்த வீடு கட்டுவோர்க்கு முக்கிய யோசனைகள் !

* வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை
மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.

தண்ணீர் : 

* தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரிமான த்துக்கு உள்ளாகும்.

அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

* தண்ணீர் தேவைக ளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார் களைத் தேர்ந்தெடுக்கும் போது சில விக்ஷயங் களில் உஷாராக இருக்க வேண்டும்.

தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப் பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

* இப்போ தெல்லாம் அதிக படியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகி விட்டது என்பதை
உணர்த்தும் அலாரம் பொருத்தப் பட்ட மோட்டார் களைப் பொருத்தி விட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

* வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகை யிலான ஏற்பாடுடைய மோட்டார் களைப் பொருத்துவது புத்தி சாலித்தனம்.

சிமெண்ட்

* தரமான சிமெண்ட்டால் தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும்.

அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்து விட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

* மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டு க்குள் கையை விடும்போது சிலுசிலு வென்று குளுமையாக இருக்க வேண்டும்.

தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும் போது அது மிதந்தால் தரத்தில் கோளா றானது என்று அர்த்தம். அதே போல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

* சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனு மதிக்கலாம்.
அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டை களைப் பெறுவதற் கான முயற் சிகளில் இறங்குங்கள்.

மணல் : 

* மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்தி ருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்து விடும்.

* மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன் படுத்தலாம். பார்வை யாலேயே இதைக் கண்டு பிடித்து விட முடியும்.

அதற்கு மேல் இருந்தால் பயன் படுத்து வதைத் தவிர்க்கவும்.

* கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். 

இந்த மணலை பயன் படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்து விடும்.

மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லி விடுங்கள்.

* மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக் கூடிய சிலிக்கா அதிகம் இருந்தாலும் பயன் படுத்தக் கூடாது.

ஏனென்றால், இது சிமென்ட் டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் : 

கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன் படுத்தப் படுகின்றன. 

இதற்கு எந்த வகை இரும்பு களைப் பயன் படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

* ஆலையில் இருந்து தயாரிக்கப் பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்ற வற்றில் சிறு பிசிறுகள் இருக்கக் கூடும்.

இவற்றை அகற்றிய பின்னரே பயன் படுத்த வேண்டும்.

* இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங் களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப் பட்டாலும் நீக்கிவிட வேண்டும்.

எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில் லாமல் போய் விடக் கூடும்.

செங்கல் : 

* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற் களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறை யிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என

இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப் படுகின்றன. இரண்டு தயாரிப்பு களையுமே வாங்கிப் பயன் படுத்தலாம்.

* செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும்.

பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

* இப்போ தெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன் பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்க ப்படும்

இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப் படுகிறது.

இந்தக் கல், மூன்று செங்கற்க ளுக்கு இணை யானது. வேலையைச் சுலபமாக்கும்.

* கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும் போதோ, கையாளும் போதோ,

பயன் படுத்தும் போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகி விடும். 

நீங்கள் களத்தில் இருந்தால் தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவல கத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என
நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும். 

* கான்ட்ரா க்டரிடம் வேலையை ஒப்படை க்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர் களுக்கும் இடையே உள்ள நல்லுறவு,

அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லா வற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரி யுங்கள்.

* மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது.

ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது. 

* அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்து தான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? 

முன் கூட்டியே, பின் தேதியிட்ட காசோலை களை டீலர்களிடம் கொடுத்து விட்டு,
அந்தந்த தேதியில் தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். 

* சமீபத்திய தொழிற் நுட்பங் களையும், நவீன கட்டுமானப் பொருட் களையும் பயன் படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

* செங்கற் களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன் படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

* மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக் கூடியவை.

 எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக் கொண்டிருப் பீர்கள்?.

குறைந்த பட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?. 

* எல்லா வேலை களுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன் படுத்துங்கள்.

மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன் படுத்தலாம்.

* பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சி யாக சுவற்றின் வெளிப் புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

* ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி,

சலித்து பயன் படுத்து வதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்ப ட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன் படுத்தலாம்.

சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர் களுக்கு ஆற்று மணலை விட M.சேண்ட் விலை குறைவானது என்பது குறிப்பிடத் தக்கது. 

* க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம்.

இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிட த்தில் ரூ.30,000 வரை மிச்சப் படுத்தலாம்.
* எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்தி விடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள்

 இந்த வேலைகளின் போது தான் பொறியா ளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள்.

ஸ்லாபு போன்ற மற்ற வேலை களுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும். 

* முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன் படுத்த முன்வர வேண்டும்.

பழைய பொருட்க ளாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம். 

* உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களை விட காஸ்ட்லி யானது எதுவு மில்லை.

* தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக் காதீர்கள்.

* கட்டு மானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

* செலவா னாலும் பரவா யில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங் களையே வாங்குங்கள்.
இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட் தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

* நான் பிராண்டட் பெயிண்ட் களை உங்கள் கட்டுமான த்திற்குப் பயன் படுத்தாதீ ர்கள்.

தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப் படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

* வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவனமாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

* சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

* கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது

செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக் கான நீர் தொட்டியாக பயன் படுத்திக் கொள்ளலாம்.

* போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங் குவது வரவேற் கத்தக் கதாகும்.

* அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன் படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும்

ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன் படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

* அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து

இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரை யுடன் முடிவு செய்ய வேண்டும்.
* பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத் திற்கும், வீட்டின் உயரத் திற்கும் பொருத்த மான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

* லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில்

உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக் கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறி யாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங் களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

* ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு

எதிர் காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப் பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

* கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகிய வற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள்,

அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

* தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை,

ஓடுகள், பளபளக்கும் சமைல யறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

* வண்ணப் பூச்சு உட்புற த்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர் களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும்.

என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

* உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்
Previous Post Next Post
COMMENTS... plz use me