மொபைல் போன் ஏற்படுத்தும் பல்வேறு நோய்கள். ஓர் அதிர்ச்சி தகவல் ! மொபைல் போன் ஏற்படுத்தும் பல்வேறு நோய்கள். ஓர் அதிர்ச்சி தகவல் ! - ETbuild

மொபைல் போன் ஏற்படுத்தும் பல்வேறு நோய்கள். ஓர் அதிர்ச்சி தகவல் !

இன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால், நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது. யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
 
எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந் துள்ளது. அதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன் பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம்.

மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான பிரச்னை களை க் கண்டறிந் துள்ளனர். அவற்றை இங்கு காணலாம்.

1.நோமோ போபியா (Nomophobia): நோமோபியா என்பது ஸ்மார்ட் போன்களால் பெற்றுள்ள, எங்கும் காணப்படுகிற ஒரு மன வியாதியாகும். இந்த சொல், மொபைல் போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த மேலை நாட்டு அமைப்பு ஒன்று உருவாக் கியுள்ளது.

இந்த சொல் "nomobile phobia” என்பதன் சுருக்க மாகும். மொபைல் போன் பயன் படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப் படுகையில் இந்த மன வியாதிக்கு நாம் ஆளாகிறோம்.

ஒரு விமானம் தரை இறங்கி யவுடன், அதில் பயணம் செய்தவர் களைப் பாருங்கள்.மிக வேகமாகத் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, ""அப்பாடா'' என்று பெரு மூச்சு விடு வார்கள்.

அதுவரை பல மணி நேரம் மொபைல் போன் மூலம் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத தால், ஒருவகை விரக்திக்கு ஆளாகி ன்றனர். இதுவே நோமோ போபியா ஆகும்.
பல தலைமை நிர்வாகிகள், மருத்து வர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில் தூக்கத்தி லிருந்து விழித் தவுடன், முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து,

அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பது தான். அதுவரை, மொபைல் போனைப் பயன் படுத்தாமல் இருந்தது அவர்க ளிடம் இந்த போபியா வினை உண்டாக்கி உள்ளது.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இதே நோமோ போபியா என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷன் உருவாக்க ப்படுள்ளது.

இந்த அப்ளிகேஷன் நாம் எந்த வகைகளில், மொபைல் போன் ஒன்றை மிக அதிக உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாகப் பயன் படுத்துகிறோம் என்பதனை அளக்கிறது.

2. ஸ்மார்ட் போன் அடிமை: நோமோ போபியா மன நிலை தீவிரமாக மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமை யாகிறார். ஸ்மார்ட் போனுடன் ஒருவரின் அதீத இணைப்பு, உறவுகளைக் கெடுக்கிறது.

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல கத்தில் நம் பண்பை மாற்றுகிறது. திருமண த்தின் போது கூட ஒரு மணப்பெண், தன் ஸ்மார்ட் போனைப் பயன் படுத்திக் கொண்டிரு ந்ததாக, ஆய்வு ஒன்று தெரிவி க்கிறது.

உளவியல் நிபுணர் ஒருவர் கூறு கையில், சமூக நிகழ் வுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட, மனிதர்களி டமிருந்து விலகி இருக்க, மொபைல் போனை ஒரு கருவியாகப் பயன்ப டுத்தத் தொடங்கி உள்ளனர் என்று கூறி யுள்ளார்.

எந்த அளவுக்கு ஒரு மொபைல் போன் அதி நவீன வசதி கொண்ட தாக உள்ளதோ, அந்த அளவிற்கு, அது ஒருவரை போன் பைத் தியமாக மாற் றுகிறது.
தென் கொரியாவில், 20 சதவீத மாணவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமை களாக உள்ளனர் என்று அந்த நாட்டு அரசு அறிவி த்துள்ளது. இதிலிருந்து விடுபடக் கூடிய வழிகளும் இப்போ தைக்கு உறுதியாகப் புலப்பட வில்லை.

3. தூக்கத்தில் மெசேஜ் டெக்ஸ்ட்: அமெரிக்கா வில் ஐந்தில் நான்கு இளைஞர்கள், தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்கு கின்றனர்.

நண்பர்களி டமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிக்க இந்த ஏற்பாடு. இதனால், அவர்களின் உறக்கம், பாதி விழித்த நிலையி லேயே (“junk sleep” syndrome) நிலை கொள்ளாமல் தொடர்கிறது.

இப்போது பலர், தங்கள் ஸ்மார்ட் போனில், தூங்கி வழிந்த வாறே, டெக்ஸ்ட் அமைக் கின்றனர். டெக்ஸ்ட் அமைப் பதில் பல எளிய வழிகள் இந்த ஸ்மார்ட் போனில் இருப்பதால் இந்த பழக்கம் தொற்றிக் கொள்கிறது.

4. ஸ்கிரீன் தரும் தூக்க மின்மை: மேற் சொன்ன இரு வித பிரச்னை களுக்குத் (“junk sleep syndrome” and sleep texting) தொடர்பானது இந்த ஸ்கிரீன் தூக்கமின்மை நோய் ஆகும். பொதுவாக, பளிச் என்ற வெளிச்சம் இருந்தால், அது பகல் போலத் தோற்றமளித்து நமக்கு தூக்கத்தினைத் தராது.

டேப்ளட் பி.சி. அல்லது ஸ்மார்ட் போனை உங்கள் கண்களுக்கு முன்னால் பிடித்து, திரையில் உள்ளதைப் படிக்க முயற்சி செய்கையில், திரை வெளிச்சம் இந்த பிரச்னை யை ஏற்படு த்துகிறது.

நம் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதனை உடல் கடிகாரம் (Body Clock) என்று அழைக்கி ன்றனர். இது தான், இரவு நெருங் குகையில், இது தூங்கும் நேரம் என, உடம்பிற்கு அல்லது மூளைக்கு எடுத்துச் சொல்கிறது.

இதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவு கிறது. நல்ல வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல் பாட்டினை அழுத்து கிறது. இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அமுங்கிப் போகிறது.
எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளி வைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும். படுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, இந்த போன்களைப் பயன்படுத் துவதனைத் தவிர்க்க வேண்டும்.

எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத் தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப் படும் இந்த தூக்க மின்மை தொடர்ந்து மக்களி டையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவி க்கின்றன.

அச்சிட்ட நூல்க ளுக்குப் பதிலாக, நூல்களைப் படிக்க, டேப்ளட் பிசிக்கள் அதிக அளவில் பயன் படுத்துவது அதிகரித்து வருவதால், டேப்ளட் பிசியினால் தூக்க மின்மை மிக அதிகமாகவே உருவாகி வருகிறது.

5. ஆமைக் கழுத்து நோய்: ஸ்மார்ட் போனை அல்லது எந்த மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலா னவர்களிடம் இல்லை. நாம் ஏதேனும் வேலை களை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிரு ப்பதால்,

கழுத்து அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்ப டுத்துவதே இப்போது பழக்கமாகி வருகிறது. இது தொடர் கையில், ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில் இதனை turtleneck syndrome என அழைக் கின்றனர்.

தொடர்ந்து இந்த பழக்கம் உள்ளவர் களுக்கு, கழுத்தில் தீராத வலி உண் டாகிறது. இந்த வலியால் அவதிப் படுவோர் அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியா வாகும்.

6. வெட்டிப் பந்தா மேடை: சமூக தளங்களில் அதிகம் உலா வருவோ ருக்கு இந்த நோய் அதிகம் இருப்ப தாகக் கண்டறியப்ப ட்டுள்ளது. இந்த தளங்களில் எழுதுப வர்கள், தங்களைப் பற்றி எழுதுகையில்,

மிக நல்ல விஷய ங்களை மட்டுமே வெளிப்ப டுத்தி, தானே, மிக நல்ல மனிதன் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கு கின்றனர். சமூக இணைய தளங்கள், இந்த வெட்டிப் பந்தாவிற்கு மேடை அமை க்கின்றன.

இதில் என்ன பிரச்னை என்றால், எல்லாரும் இந்த பொய்த் தோற்றத் தினை அமைக் கையில், மற்றவர்கள், தான் அது போல இல்லையே என்ற மன வருத்தத்திற்கு ஆளாகி றார்கள். இதனை பேஸ்புக் மனச்சுமை (Facebook Depression) எனவும் அழைக் கின்றனர்.

7. தன் காதல் மனக் கோளாறு: சமூக இணைய தளங்களில், பெரும்பா லானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப் பதிக்கின்றனர்.

இது எதற்காக? நோக்கம் என்ன? ஒன்றுமில்லை. ""இதோ ! என்னைப் பார்'' என்று கூறுவதற்காகவே. இது தன்னை த்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது.

மேலே கூறப்பட்ட கூற்றுக ளுக்காக, ஸ்மார்ட் போன் அல்லது மற்ற மொபைல் போன்கள், பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற் கில்லை.

இவை இல்லாமல், இனி இந்தப் புவியில் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இவற்றின் பயன்பாடு வந்து விட்டது.

இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள பிரச்னைக ளும் நம்மிடையே தோன்றி உள்ளன. இவற்றை உணர்ந்து திருந்தினால், நமக்கும் நாட்டு க்கும் நல்லது
Previous Post Next Post
COMMENTS... plz use me