வீட்டின் கதவுகளும் பலன்களும் ! வீட்டின் கதவுகளும் பலன்களும் ! - ETbuild

வீட்டின் கதவுகளும் பலன்களும் !

ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பவை கதவுகள்தானே? அந்தக் கதவுகள் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
வீட்டின் கதவு


மூடி இருக்கும் கதவைத் திறந்தால், அது அசையாமல் அப்படியே நிற்க வேண்டும். அப்படி நின்றால், சகல நன்மைகளு டன் நீடூழி வாழலாம்.

திறக்கும் கதவானது பெரும் இரைச்சலுடன் தானாகவே மூடிக்கொள்ளு மானால், விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உண்டு.

அதே போல் கதவைத் திறக்கும்போதும் மூடும் போதும் பெருத்த சத்தம் ஏற்பட்டால், அது அந்த வீட்டின் தலைவனுக்கு ஆகாது. 

கதவை மூடும் போது செக்கு ஆடுவது போன்ற சப்தம் உண்டானால், வீணான மனக் கவலைகளும் ஏற்படும். ஆகவே, சத்தம் எழாதபடி கதவினை உடனடியாகச் சரிசெய்துகொள்ள வேண்டும்.

தானியங்கிக் கதவுகளை அமைக்கக் கூடாது என்று சாமரங்க சூத்ர தாரா என்னும் வாஸ்து நூலில் தீர்க்க தரிசனத்துடன் கூறப்பட்டு உள்ளது. 

ஆனாலும், தற்காலத்தில் தானியங்கிக் கதவுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையில், வலப் பக்கமாகத் திறக்குமாறு அக்கதவுகளை அமைத்துக் கொள்ளலாம்.

வீடு கட்டத் தொடங்குவதற்கு ஏற்ற நாள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீடு கட்டுவதற்கான வேலைகளை ஆரம்பிக்க ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற 

ஸ்திர லக்னங்களும், ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும் உத்தமம் ஆகும்.
கதவுகளின் எண்ணிக்கை யும் பலன்களும்!
வாஸ்து சாஸ்திரம்

இரண்டு கதவுகள் : நல்ல பலனைத் தரும்.

மூன்று கதவுகள் : பகைமை ஏற்படும்.

நான்கு கதவுகள் : நீண்ட ஆயுள் உண்டாகும்.

ஐந்து கதவுகள் : நோயை உண்டாக்கும்.

ஆறு கதவுகள் : சத்புத்திர பாக்கியம் உண்டாகும்.

ஏழு கதவுகள் : மரண பயத்தை ஏற்படுத்தும்.

எட்டு கதவுகள் : செல்வம் வளரும்.

ஒன்பது கதவுகள் : நோய் உண்டாகும்.

பத்து கதவுகள் : திருடர்களால் ஆபத்து.

பதினோரு கதவுகள் : நன்மைகள் குறைவாக இருக்கும்.

பன்னிரண்டு கதவுகள் : வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும்.

பதினான்கு கதவுகள் : செல்வ வளர்ச்சி இருக்கும்.

பதினைந்து கதவுகள் : நன்மைக் குறைவு.

பொதுவாக, ஒரு வீட்டில் நிலை அமைப்புடன் உள்ள கதவுகள் இரட்டைப் படை அமைப்பில் தான் இருக்க வேண்டும். ஆனாலும், 10, 20, 30 என்ற எண்ணிக்கை யில் இருக்கக் கூடாது.
நிலத்தின் அமைப்பும் பலன்களும்!

வீடு அமையும் இடத்தின் கிழக்கு, வடக்கு ஆகிய இரண்டு பக்கங்கள் தாழ்ந்தும், மேற்கு, தெற்கு ஆகிய இரண்டு பக்கங்கள் உயர்ந்தும் இருந்தால், அந்த நிலத்தில் கட்டப்படும் வீடானது, அனைத்து நன்மை களையும், சுகமான வாழ்க்கை யையும் அளிக்கும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me