காலநிலைக்கு ஏற்ற கட்டிடக் கலை - மாற்று தொழில்நுட்பம் ! காலநிலைக்கு ஏற்ற கட்டிடக் கலை - மாற்று தொழில்நுட்பம் ! - ETbuild

காலநிலைக்கு ஏற்ற கட்டிடக் கலை - மாற்று தொழில்நுட்பம் !

கட்டிடங் களைக் கட்டுவ தற்குப் புதுப்புதுத் தொழில் நுட்பங்கள் அறிமுகமா கின்றன.
அத்தனை யையும் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதை விட நமக்கு உபயோக மானவை எவை என்பதைத் தீர ஆலோசித்து, அறிந்து அவற்றைப் பயன்படுத் தலாம்.

ஏழைகளின் பெருந்தச்சன் என கேரள மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஆங்கிலே யரான

லாரி பேக்கர் வலியு றுத்திய எலிப் பொறி பாணியில் அமைந்த செங்கல் சுவர்களை அமைப்பது நமக்கு உகந்தது. 

எலிப் பொறிப் பாணியில் செங்கல்கள் நீளவாக் கிலும் அகலவாக் கிலும் வைக்கப் பட்டுச் சுவர் அமைக்கப் படும்.

இதனால் செங்கல் பயன்பாடும் குறையும் கட்டிடம் குளுமை யாகவும் இருக்கும்.

வழக்க மாகச் செங்கல்லை ஒன்றின் மீது ஒன்று அடுக்கிக் கட்டாமல் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் போது கட்டிடம் பசுமைக் கட்டிட வரிசைக்கு நகர முடியும். 

இந்தப் பாணியில் சுவரை அமைக்கும் போது சுவரின் பூச்சுக்கு சாந்தாக சிமெண்டைப் பயன்படுத் தாமல் சுண்ணா ம்பைப் பயன்ப டுத்துவது நல்லது.

இதனுடன் ஃப்ளை ஆஷையும் சேர்த்துப் பயன்ப டுத்தலாம். சுண்ணாம்பு நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கும் பொருள், மேலும் அதன் விலையும் குறைவே.

எனவே சிமெண்டால் ஆகும் அதிக செலவை இது வெகுவாகக் குறைத்து விடும். 
தொழிற் சாலைக் கழிவுப் பொருளான ஃப்ளை ஆஷைப் பயன்படுத் துவதும் பசுமைக் கட்டிடத்தின் ஓர் அம்சமே. செங்கற் களிலும் மாற்றுச் செங்கற்களைப் பயன் படுத்தலாம். 

ஏனெனில் வழக்க மான செங்கல்லின் உற்பத்தி முறை சுற்றுச் சூழலுக்குக் கேடு விளை விக்கும்.

செங்கல் சூளைகளில் செங்கல்லைச் சுடும் போது காற்று மாசுபடும். மாற்றுச் செங்கல்கள் வழக்க மான சூளைச் செங்கல் களை விடத் திடமான, நீண்ட நாள் உழைக்கும் சுவரைத் தரும். 

பலன்கள் 

எலிப் பொறி தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தினால் 20 முதல் 35 சதவீதம் அளவுக்கு செங்கல் களைச் சேமிக்கலாம்.

பூச்சுக் கலவையின் செலவும் 30 முதல் 50 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது.

எனவே 9 அங்குல சுவரின் கட்டுமானச் செலவை 20 முதல் 30 சதவீதம் குறைக்க முடியும். 

வழக்கமான கட்டுமான த்தில் ஒரு கன மீட்டர் சுவரை அமைக்க சூளைச் செங்கல் கள் 550 தேவைப்படும் என்றால்

இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத் தினால் 470 செங்க ற்களே போதும்.

எலிப் பொறி தொழில் நுட்பத்தைப் பயன் படுத்திச் சுவரை அமைக்கும் போது கட்டிடத் தின் உள்ளே வெயில் காலத்தில் குளுமை யாகவும் குளிர் காலத்தில் வெதுவெதுப் பாகவும் இருக்கும்.

இந்தச் சுவரை அப்படியே விட்டு விடலாம். மேற்பூச்சோ, வண்ணப் பூச்சோ அவசிய மல்ல. பார்ப்ப தற்கும் அழகாக இருக்கும். 

இந்தக் கட்டுமானத் தொழில் நுட்பம் எடையும் தாங்கும். எனவே எடையைத் தாங்கக் கூடிய இடங்க ளிலும் இதைப் பயன் படுத்தலாம்.
அறைகளைப் பிரிக்கும் சுவர் எழுப்ப வேண்டிய இடங் களிலும் இந்தப் பாணி கை கொடுக்கும். 

எலிப் பொறிப் பாணியி லமைந்த சுவர்கள் வழக்கமான சுவர்களை விட 20 சதவீதம் குறைவான எடையையே பூமிக்குக் கடத்தும்.

எனவே முறையாக இந்தச் சுவரை அமைக்கும் போது அஸ்திவாரச் செலவும் கொஞ்சம் குறையும்.

அதிகச் செலவு பிடிக்கும் பொருள் களான செங்கல், சிமெண்ட், இரும்பு போன்ற வற்றின் உபயோகத்தைப் பெருமளவில் குறைக்க இத்தொழில் நுட்பம் உதவும்.

சுற்றுச் சூழல் நோக்கில், பசுமை வாயுக்களின் உற்பத்தி யையும் எலிப்பொறி தொழில் நுட்பம் குறைத்து விடும்.

அதிகப் பாதுகாப்பு தேவை என்று நினைத்தால் சுவரின் இடைவெளி களில் அஸ்தி வாரம் வரையிலும் வலு வூட்டப் பட்ட கம்பிகளைப் பயன்படுத் தலாம்.

மொத்தத் தில் பார்க்கும் போது, ஒரு கன மீட்டர் சுவர் அமைப்பதில் சிமென்ட் செலவு ரூ. 288 குறையும்; 

செங்கல் செலவு ரூ. 576 குறையும், மணல் செலவு ரூ. 13 குறையும் என்கிறா ர்கள்.

செலவைக் குறைக்கும் எலிப் பொறித் தொழில் நுட்பத்தில் கட்டிடம் அமைத் தால் சுற்றுச் சூழலுக்கும் நல்லது;

நமக்கும் நல்லது என்கிறா ர்கள் கட்டிடக் கலை நிபுணர்கள்.
Previous Post Next Post
COMMENTS... plz use me