நீங்க வாங்குற நிலம்/ வீட்டுக்கு CMDA/ DTCP அப்ரூவல் இருக்கா? நீங்க வாங்குற நிலம்/ வீட்டுக்கு CMDA/ DTCP அப்ரூவல் இருக்கா? - ETbuild

நீங்க வாங்குற நிலம்/ வீட்டுக்கு CMDA/ DTCP அப்ரூவல் இருக்கா?

நிலம் வாங்கப்போகும்போது ஏகப்பட்ட குழப்பங்கள் நமக்கு வரும். முக்கியமா, சிஎம்டிஏ (CMDA) அப்ரூவல்னு சொல்றாங்க, டிடிசிபி (DTCP) அப்ரூவல்னு சொல்றாங்க. 


இன்னும் சிலர் பஞ்சாயத்து அப்ரூவல் இருந்தா போதும்னு சொல்றாங்க. இதில் எதுதான் சரி?
நீங்க வாங்கப்போற நிலம் நகர எல்லைக்குள் இருந்தா அதுக்கு சிஎம்டிஏ (CMDA - Chennai Metropolitan Development Authority) அப்ரூவல் வாங்கணும். குடியிருப்பு களைக் கட்டி விற்கும் புரோமோட்டர் களிடமிருந்து 

நீங்கள் வாங்கு வதாக இருந்தால் அவர்க ளுடைய லே-அவுட் வரை படத்தைக் கேட்டு வாங்கி, அதில் சிஎம்டிஏ அப்ரூவல் நம்பர் இருக்கிறதா என்று பாருங்கள். 

மக்கள் நெருக்க முள்ள பகுதிகளில் கட்டப் பட்டிருந் தால் அது முறையான அனுமதி பெறப்பட்டி ருக்கிறதா என்பதை ஒரு வழக்கறிஞர் மூலமாகத் தெரிந்து கொள்வது அவசியம். 

இரண்டு கட்டடங் களுக்கு இடையே போதுமான இடைவெளி உள்ளதா, அரசாங்க வரை முறைகளுக் குட்பட்டு இருக்கிறதா போன்ற வற்றைச் சரிபார்த்த பின்னரே பத்திரப் பதிவுக்குச் செல்ல வேண்டும்.

நீங்கள் வாங்கும் மனை, சென்னை மெட்ரோ எல்லைக்கு வெளியே இருந்தால் அந்த மனைக்கு டிடிசிபி (DTCP - Directorate of Town & Country Planning) அப்ரூவல் பெற்றிருக்க வேண்டும். 

இந்த அப்ரூவலை நீங்கள் ப்ளாட்/அபார்ட்மென்ட் வாங்கும் பில்டர் அல்லது புரோமோட்ட ர்கள் வாங்கி யிருக்க வேண்டியது அவசியம். அந்த டிடிசிபி அப்ரூவல் எண்ணை நீங்கள் கேட்டுப் பெறுதல் வேண்டும். 

டிடிசிபி அப்ரூவல் பெற்ற மனை உள்ள சாலையின் அகலம், பொதுமக்கள் பயன்படுத்த பூங்காக்கள் போன்ற விஷயங்களைக் கணக்கில்கொண்டே அனுமதி அளிக்கப் பட்டிருக்கும்.

நகரத்துக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒவ்வொரு பகுதியும் கிராமப்புறப் பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும். இவை, கிராமப்புற முன்னேற்ற த்துக்காக வீடுகள் கட்ட அனுமதி கொடுத்து வந்தன.
இதற்கும் டிடிசிபி அப்ரூவல் பெற வேண்டும் என்பதுதான் விதி. முன்பு பட்டா இருந்தாலே பஞ்சாயத்து அப்ரூவல் பெற்று, வீடு கட்டலாம் என்ற ஒரு நிலை இருந்தது. 

புதிய கட்டு மானங்களால் கிராமப் பஞ்சாயத்துக்கு வருவாய் கிடைக்கும் என்பதால் நிறைய கட்டடங் களுக்கு அனுமதியும் அளிக்கப் பட்டது. 

ஆனால், இரண்டு வருடங் களுக்குள் வீடு கட்டாமல் போனால் மீண்டும் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

ஆனால், தற்போது முறையாக சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அமைப்பிடம் அப்ரூவல் வாங்காத மனைகள், விவசாய நிலங்களை விற்கவோ, வாங்கவோ சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.

டிடிசிபி அல்லது சிஎம்டிஏ அப்ரூவல் இல்லாத மனையில் வீடு கட்டினால் சிக்கல் தான். ஆகையால், வீடு அல்லது ப்ளாட் வாங்கும் போது இந்த அப்ரூவல் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். 

மேற்கூறிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுக் குட்பட்டு ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (TVH) டைட்டானியம் சிட்டி புராஜெக்ட் எனும் வீட்டு மனைகளை அளிக்கிறது.


இந்த டைட்டானியம் சிட்டி புராஜெக்ட், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் குடியிருப்பு மனை களைக் கொண்டி ருக்கிறது. 

600 முதல் 2,400 சதுர அடி பரப்பளவில் இந்த வீட்டு மனைகள் ரூ.6 லட்சத்தி லிருந்து கிடைக்கிறது. இந்த மனைகள் சிஎம்டிஏ அப்ரூவல் பெற்றவை.
இவை சாலைகளை ஒட்டியே (on-road) அமைந் துள்ளன. மேலும் பள்ளிக்கூடம், கல்லூரி, விமான நிலையம் மற்றும் மருத்துவ மனைகளு க்கு அருகே அமைந் துள்ளன. 

விரைவில் கட்டப்பட விருக்கும் வண்டலூர் புறநகர் பேருந்து நிலைய த்துக்கு மிக அருகிலும், சென்னைப் புறவழிச் சாலை ஒன்று மற்றும் இரண்டுக்கு நடுவிலும் அமைந்தி ருக்கிறது. 
கூடுதல் விபரங்களுக்கு கிளிக் செய்யவும்!
அத்துடன் தேசிய நெடுஞ்சாலை களுக்கு மிக அருகே அமைந் துள்ளது கூடுதல் சிறப்பு!
Previous Post Next Post
COMMENTS... plz use me